Sunday, April 4, 2010

செய்தி


யாழ்ப்பாண மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்கள் 03.04.2010 சனிக்கிழமை மாலை கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலை முன்றலில் நடைபெற்ற தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்து உரையாற்றும் பொழுது பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.

எமக்கான அபிவிருத்தியைப் பேணுவதற்கும் எமக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் எமக்குரிய தனித்துவமான தொன்மையான கலை, கலாசாரங்களை வளர்த்தெடுப்பதற்கு எமக்கு சட்டங்களை ஆக்கவல்ல அரசியல் பலம் தேவையாகவுள்ளது. மக்கள் இதனை உணர்ந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றம் அனுப்பி எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் இவற்றை அரசிடம் அடிபணியாது, உறுதியான முறையில் பெற்றுக் கொள்வதற்கு ஆணை தரவேண்டும் என்றார்.

“எமது 62வருடகால நியாயமான உரிமைப் போராட்டத்தை அரசியல் கோரிக்கைகளை ஆயுத வழியில் அமைந்த பயங்கரவாதப் போராட்டம் என்றார்கள். சர்வதேசங்களும் அதற்குத் தூபம் போட்டன. முதல் 30 ஆண்டுகளும் அறவழியில் தானே போராடினோம். காந்தியின் சத்தியாக்கிரகம் அறவழிப் போராட்ட வடிவம் தானே. தந்தை செல்வா தலைமையில் தமிழர் உரிமைக்காக போராடிய போது அரசு ஆயுத பலம் கொண்டு அடித்து, உதைத்து, மண்டையால் இரத்தம் சிந்தச் சிந்த விரட்டியது.
இந்த அநியாயத்தை கண்ணுற்ற இளைஞர்கள் ஆயுத பலத்தை ஆயுத பலத்தால்தான் அடக்க முடியுமென ஆயுதம் ஏந்தினார்கள். அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது சிங்கள அரசு தானே … 30 ஆண்டுகள் தொடர்ந்த அந்த நியாயமான கோரிக்கைகளைக் கொண்ட போராட்டத்தை இந்தியா உட்பட 20க்கு மேற்பட்ட சர்வதேச நாடுகளின் நேரடி தலையீட்டையும் 80க்கு மேற்பட்ட நாடுகளின் மறைமுக ஆதரவையும் பெற்று கேவலமான யுத்த தர்மத்துக்கே இழுக்கான முறையில் கடந்த ஆண்டு மேமாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் அழித்தீர்கள். குழிகளை ஏலவே கிண்டிவைத்து விட்டு திட்டமிட்டு 40,000 பொதுமக்களை அப்பாவிகளான பெண்கள், குழந்தைகள் என்று பாராது கனரக ஆயுதங்களைப் பாவித்து கண்தெரியா இருட்டு நேரத்தில் கொன்று புதைத்துள்ளீர்கள். உங்கள் கரங்கள் இரத்தக் கறை படிந்தவை. சர்வதேசக் குற்றவாளிகள் நீங்கள். இதற்கு காலம் பதில் சொல்லும்.
இன்று 62 வருடமாக நாம் கோரி வந்த அதே நியாயத்திற்காக ஆழமான ஜனநாயக வழியில் நின்று குரல் கொடுக்கத்தான் பாராளுமன்றம் வருகின்றோம். உங்களுக்கு ஒத்துழைத்த சர்வதேச நாடுகளையும் சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஏனைய சர்வதேச நாடுகளையும் நோக்கி உரத்த குரலில் எமது நியாயத்தை எடுத்துரைத்து சிங்கள அரசின் திமிரை அடக்கி எமக்குரிய உரிமையை பெற்றுத் தாருங்கள் என அறைகூவல் விடவே பாராளுமன்றம் எமக்குத் தேவை என்கிறோம்.
நம் தனித்துவமான தேசிய இனம், எமக்கு பாரம்பரிய தாயகப் பிரதேசம் உண்டு, பாரம்பரியமாக அப்பிரதேசத்தில் எமக்குரிதான விவசாயத்தை, கடல்தொழிலைச் செய்து வாழும் உரிமை எமக்கு உண்டு. இங்கு தொன்மையாக வாழ்ந்து வரும் மக்களுக்குரிய இறைமையை இணைத்து சுய ஆட்சியை - சுயராஜ்ஜியத்தை கட்டி எழுப்பும் உரிமை எமக்கு உண்டு. அதனைப் பெற சகல வழிகளிலும் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடுவோம்.” என்று சூளுரைத்தார் பேராசிரியர்.

எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா?




நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது.
'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அத்திவாரக்கல் நாட்டும் விழாவை நடாத்தியுள்ளது. இவ் விழாவில்; மத்திய வங்கி ஆளுநர், அரச அதிபர் திரு.கே.கணேஷ; மற்றும் இராணுவ அதிகாரிகள் பங்கு கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

நல்லூர் இராசதானியின் நினைவுச் சின்னங்களான சங்கிலியன் வளைவு, மந்திரிமனை, சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் நூறு யார் தூரத்தில் இந் நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படவுள்ளமை யாழ் கலாசார சீரழிவின் அத்திவார இடுகை என யாழ்ப்பாணவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். அநூராதபுரம் பொலனறுவையில் கலாசார முக்கோணங்களை அமைத்து தமது வரலாற்றுச் சின்னங்களைப் பேணிவருகின்ற சிங்கள அரசு இங்குள்ள கலாசார மையத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டல் கட்டுவது எமது கலாசாரச் சீரழிவுக்கான ஆரம்பம் என்பதை தமிழர்கள் புரியாமல் இல்லை. இவர்கள் ஹோட்டல் கட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் வேறு இடம் இல்லையா? கடற்கரைகள் சூழவுள்ள யாழ் குடாநாட்டில் பொருத்தமான இடத்தை தெரிந்திருக்கலாம் அல்லவா?

எமது இராசதானி அமைந்திருந்த ஆலயங்கள் அமைந்துள்ள நல்லூரில் ஏன் இக் ஹோட்டல்? நட்சத்திர ஹோட்டல்களில் என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதவர்கள் இல்லை. சூழல் பேண் சுற்றுலாத்துறையும் தங்குமிடங்களும் வளர்த்தெடுக்கப்படுதை நாம் எதிர்க்கவில்லை.ஆனால் இவர்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் எம் பண்பாட்டை நாசம் செய்கிறார்கள். இதனால் தான் நாம் எமக்கான அபிவருத்தியை நாமே மேற்கொள்ள வேண்டும் என்கிறோம் . நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டும் முயற்சியை யாழ் பொதுமக்கள் எதிர்க்கின்றார்கள். இதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம் என தெரிவித்தார்.



Thursday, March 18, 2010

அரசியல் என்பது சாக்கடையல்ல அது புனிதமாக்கப்படவேண்டும்

அரசியல் என்பது சாக்கடையல்ல அது புனிதமாக்கப்படவேண்டும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் இரா.சிவசந்திரன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பு வேட்பாளராக நிற்கின்ற பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தமது கட்சி அலுவலகத்தில் 14.03.2010 அன்று பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தபோது பின்வரும் விடயங்களை முன்னிலைப்படுத்தினார்
இன்றைய அரசியலில் திட்டமிட்டே பெருந்தொகையான கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சிங்கள அரசு களமிறங்கியுள்ளது.
கல்வியறிவில் உயர்நிலையிலுள்ள யாழ் சமூகத்தை கேலிக்குள்ளாக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்பட வேண்டும். கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்தோர் பலர் ‘சென்றுவா வென்றுவா’ என ஆசீர்வதித்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கு எமது மக்களின் வீடுகளை வாடகைக்கு எடுத்து வீடுகளில் நின்று ஒரு குழப்பமான தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சமீப காலத்தில் சுற்றுலா எனக்கூறி வருபவர்கள் யாழ்ப்பாணத்தில் அல்லோலகல்லோலப் படுவதை நீங்கள் அறிவீர்கள். மூன்று பெரிய தனியார் விடுதிகளான சுபாஸ்விடுதிஞானம்ஸ்விடுதிஅசோக்விடுதிகளை உயர்பாதுகாப்புவலயத்தினுள் அடக்கி இராணுவம் பொலிஸ் என்பவற்றை நிலைகொள்ளவைத்துவிட்டு சுற்றுலாத்துறையை வளர்க்கிறோம் என்று கூறுவது புத்திசாலியான உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். கலக்கிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சி போன்று யாழ்ப்பாணத்தைத் திரும்பிப் பார்க்காத பலரும் கூலிப்பட்டாளம் போன்று தேர்தல் களத்தில் இறங்கியிருப்பது உங்களுக்கு அவமானமாகத் தோன்றவில்லையா? இந்த நிகழ்வொன்றே இங்கிருப்போரை முட்டாளாக்கும் நடவடிக்கையென புரிந்துகொள்ளப் போதுமானது. இதற்கு நீங்கள் தகுந்த பாடத்தினைப் புகட்ட வேண்டும். இன்று நாம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை போர் என்ற கொடிய செயலால் சிங்கள அரசாங்கமும் சர்வதேசமும் கூட்டுச் சதியிட்டு மக்களை இடம்பெயர வைத்த நடவடிக்கை ஆகும். உள்@ர் இடம்பெயர்வு என்ற வார்த்தையை சிங்கள அரசே ஏற்படுத்தியது. அதேபோல் சர்வதேச புலம்பெயர்வாளர் எனும் வர்க்கத்தினரையும் இவர்களே ஏற்படுத்தினர். இவை பாரம்பரியமான எமது தமிழ் பிரதேசங்களிலேயே நிகழ்கின்றன. ஏனைய இடங்களில் நிகழ்வதில்லை. தமிழ்முஸ்லிம் மக்களே இதில் பாதிக்கப்படுகின்றனர். ஒருத்தரின் வாழ்வாதாரங்களைச் சிதைப்பதன் மூலம் அவனின் ஒட்டுமொத்த வாழ்வினையும் சிதைக்க முடியும். இதனைத்தான் பல இனவாத சிந்தனை கொண்ட திடட்மிடலாளர்களைக் கொண்டு அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றது. வன்னியில் 3 1/2 இலட்சம் மக்கள் பலாத்காரமாக பிடுங்கியெறியப்படுள்ளனர். அவர்களை மீட்டெடுப்பது என்பது சாதாரண விடயமல்ல. 2000 வருடங்களுக்கு மேலான வாழ்க்கைத் தொடர்ச்சியைக் கொண்ட வன்னி நிலப்பரப்பை ஒரு சில மாதங்களில் மீட்டெடுப்போம் என்று சொல்லும் அரசின் கபடத்தனத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? இவற்றினை மாற்றி எமது பொருளாதாரத்தை நாமே அபிவிருத்தி செய்யவும் எமது அரசியலை நாமே செய்யவும் எமது கலாசார பண்பாடுகளை நாமே பேணும் வழிகளை காண்பதற்காகவுமே நீண்டகாலமாக விலைபோகாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தமிழரசுக்கட்சியில் போட்டியிடுகின்றேன். அரசியல் என்பது சாக்கடையல்ல. அது புனிதமாக்கப்படவேண்டும் அதற்கு ஆய்வுஅறிவுதெளிவுஅஞ்சாமை எதனையும் ஆதாரத்துடன் எடுத்துரைக்கும் வல்லமை என்பன வேண்டும். இவை எனக்கு இருப்பதாகக் கருதினால் நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

என மாணவர்களிடையே உரையாற்றும்போது பேராசிரியர் குறிப்பிட்டார். மாணவர்களும் பேராசிரியர் அவர்களின் அரசியல் பிரவேசம் தமிழ் மக்களுக்கு அவசியமான ஒன்று எனவும் தங்கள் பணியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தங்களுடைய முழுமையான ஆதரவை வெளிப்படுத்துவோம் எனவும் உறுதி கூறினர்

Thursday, March 11, 2010

பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி





பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2010
யாழ்ப்பாணதேர்தல் மாவட்டம்




இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர்

பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி

(1) நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடத் தீர்மானித்ததன் காரணம் என்ன?
தமிழர் அரசியலில் 30 ஆண்டுகால அறவழிப் போராட்டத்திலும் 30 ஆண்டகால ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டு இன்று மீண்டும் ஆரம்பப் புள்ளியில் நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழரது எதிர்கால அரசியல் என்பது சர்வதேச சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜனநாயக அடித்தளத்தில் நின்றுகொண்டு உலக மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி எமது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்காகக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்குக் கல்வியாளர்கள் தேவை. சர்வதேச அரங்கில் எமது விடயங்களை எடுத்துக் கூறத்தக்க தெளிந்; அரசியல் புலமையாளர்களின் அவசியத்தினை உணர முடிகிறது. அரசியல் எல்லோரும் சொல்வது போல் சாக்கடை அல்ல. எமது எதிர்கால மேம்பாடு மற்றும் வாழ்வை நிர்ணயிக்கின்ற சக்தியாகவே அரசியலைப் பார்க்க முடிகிறது. எமது அபிவிருத்தி நிலைத்திருக்க எமக்கான அரசியல் தேவை. அபிவிருத்தி என்ற போர்வையில் உலகமயமாக்கல் என்ற அடிப்படையில் பல்தேசிய நிறுவனங்கள் நுழைந்த நாட்டை மேலும் சுரண்டும் போக்குத் தென்படுகின்றது. எமக்குரியதான அபிவிருத்தி எது என்பது பற்றிய தெளிவு அவசியம். இன்றைய அரசியலை வழிநடத்துவோருக்கு இது இன்றியமையாததாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியல் தந்த பாடத்தின் அடிப்படையிலேயே இதனைக் கூறுகின்றேன்.


(2) குறிப்பாக நீங்கள் தமிழரசுக் கட்சியில் இணைந்து ஒரு வேட்பாளரானதற்கான அடிப்படை முக்கியத்துவம் என்ன?
வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான் எனது தந்தையாரும்,தாயாரும் பாடசாலை அதிபர்களாகக் கடமையாற்றியுள்ளனர். தீவுப்பகுதியின் அபிவிருத்தியில் அவர்கள் அதிக அக்கறை செலுத்தியவர்கள். அமரர் வி..கந்தையா. புண்டிதர் .பொ.இரத்தினம் போன்றவர்களின் தேசிய மட்டத்திலான அரசியலுக்கு பிரதேச மட்டத்தில் தூணாக நின்றவர் என் தந்தையார். 1944ல் வேலணை கிராமச் சங்க 2ம் வட்டாரத் தேர்தலில் பங்குகொண்டு ஏக மனதாகத் தெரிவாகி கிராமசபை அரசியலில் அவர் ஈடுபட்டார். பிரதேச மட்டங்களில் சமூக, கல்வி சம சேவைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கியதால் எனது பாரம்பரியத்தில் அரசியல் என்பது புதிதல்ல. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் எனது தந்தையின் தந்தை வைத்தியர்.சிதம்பரப்பிள்ளை கூட வேலணை கிராம சபைத் தலைவராக இருந்துள்ளார். எனவே எனது அரசியல் பாரம்பரியம் இரண்டு தலைமுறைக்கு முந்தியது. மேலும் நீண்ட காலமாக நான் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவனாகவே இருந்து வருகின்றேன். தமிழர்கட்சி அரசியல் இயங்க முடியாமைக்கான காரணம் உங்களுக்கே புரியும். இப்பொழுது அதற்கான சந்தர்ப்பம் வரும் போது கட்சி அரசியலுக்கு வரும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது.

(3) ஒரு புலமையாளராக அறியப்பட்ட நீங்கள் இலங்கை அரசியலில் இணைந்து கொண்டதை எப்படி உணருகிறீர்கள்?
அரசியல் அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. மக்களின் பல்துறை அம்சங்களிலும் அதன் வளர்ச்சியிலும் அரசியலின் பங்கே கணிசமாக உள்ளது. எனவே அரசியலில் புலமையாளர்கள் வந்து கலந்து கொள்வது மிகவும் அவசியமானது என கருதுபவன் நான். வடக்குக் கிழக்குப் பிரதேசத்தினை தாயகப் பிரதேசம் என்பதை ஆய்வு அறிவியல் பூர்வமாக நிறுவுவதில் தீவிரமாகச் செயற்படுபவன் நான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தமிழர்களுக்கு எதிரான தரப்படுத்தல் ஒடுக்கு முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடும் மனப்பாங்கு எனக்கு இருந்தது. இன்றும் அதே உணர்வுடனேயே செயற்படுகிறேன். இன்று யாழ் தேர்தல் களத்தில் நிற்கின்ற 15 அரசியல் கட்சிகளினதும், 12 சுயேட்சைக் குழுக்களினதும், 324 வேட்பாளர்களின் தகுதி பற்றியும் அவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தனர் என்பது பற்றியும் நீங்கள் அறிவீர்கள். எமது கட்சியில் வேட்பாளர்களாக நிற்கின்ற முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களும் 10 புது முகங்களும் ஒப்பீட்டளவில் புலமையானவர்களாகவே தெரிகின்றனர். இவர்களை ஒற்றுமையாகத் தேர்வு செய்வது தமிழர்தம் அரசியலை முறையாக வழிநடத்தும் என நம்புகிறோம்.


(4) இது தொடர்பாக சமூக நிலைகளில் எவ்வாறான கருத்து நிலைகள் உலாவுகின்றன?
இலங்கையில் யாழ்ப்பாணம் பாரம்பரியமாகவே கல்வியில் உயர் நிலையிலும் சிறந்த புலமையாளர்களையும் கொண்டது. எனவே கல்வியாளர்கள், புலமையாளர்கள் அரசியலுக்குத் தேவை எனும் உண்மை யாழ் சமூகத்திற்கு சொல்லாமலேயே புரியும் ஒரு விடயம். யாழ் தமிழ் வாக்காளர்கள் அறிவு, தெளிவு, துணிவு, அர்ப்பணிப்பு உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்பது புரியத் தொடங்கி விட்டது.


(5)உங்களது சமூகத் தொடர்பு அதன் வழியான சமூகம் பற்றிய புரிதல் உங்களது அரசியலுக்கு துணை நிற்குமா?
நான் பல்கலைக்கழக விரிவுரையாளனாக, புவியியற்துறை ஆய்வாளனாக, அதன் தலைவனாக, கலைப்பீடாதிபதியாக, புறநிலைப் படிப்புக்கள் அலகின் இணைப்பாளராக பல்வேறு தளங்களில் புலமை சார்ந்து செயற்பட்டு வந்த போது சமூகத் தொடர்பினையும் அது பற்றிய தெளிவினையும் நன்றாகவே உள்வாங்கியுள்ளேன். இதை விட எனது இலக்கிய, கலையுலகத் தொடர்பும் இதற்கான ஆழத்தினை கொடுத்துள்ளது என நம்புகிறேன். ஊற்று, ஆய்வு, சிந்தனை, மார்க்கம், தமிழ்க் கலை ஆகிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய போதும்; அகிலம் எனும்; சமூக, அறிவியல் இதழினை வெளியிட்ட போதும் இதனை நான் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளேன். நான் பல்கலைக்கழகத்தில் இருந்த போது மக்களுடன் இணைந்தவனாகவும் சமூக சேவைக்கான புலம்களைத் தேடுபவனகாவும் இருந்துள்ளேன். நாம் அறிவைப் பரவலாக்கம் செய்பவர்களாகவே பணிபுரிந்து வந்தோம். பொருளாதார, சமூக, அரசியல் மேம்பாட்டை எவ் வழிகளில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அறிவோம். அது மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.


(6) உங்களுடைய பார்வையில் பாராளுமன்றத் தேர்தல் 2010 எப்படி?
பொதுவாக ஜனநாயக அரசியலைப் பலமுள்ளவர்கள் கேலிக் கூத்தாக்கும் நிலையே காணப்படுகிறது. உலக நாடுகளில் பல கட்சி ஆட்சிமுறை நிலவுவதைக் காணலாம். இங்கு எதிர்க் கட்சிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் அரசகட்சிகள் செயற்படுவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும். விமர்சனங்கள், கருத்துப்பரிமாற்றங்கள் என்பன ஆரோக்கியமான ஜனநாயக முறைக்கு அவசியம். தமிழ்ப் பிரதேசத் தேர்தலில் ஆளும் கட்சி ஆதரவாளர்களே பல சுயேட்சைக் குழுக்களை தேர்தலில்; களமிறக்கியமை திட்டமிட்டு ஜனநாயகத்தை புதைகுழிக்குள்; தள்ளும் நடவடிக்கையாகவே மக்கள் உணர்கின்றார்கள். அவர்களின்பால் வெறுப்புக் கொள்கிறார்கள். தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைப்பது தான் இதன் அடிப்படை நோக்கம். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தேர்தலின் பின் தமிழர் கூட்டமைப்புடன் பேசி தமிழருக்கான நிரந்தரத் தீர்வு வேண்டுமென மகிந்த அரசை வற்புறுத்தி வருகின்றன. இன்நிலையில் கூட்டமைப்பின் பலம் சிதைக்கப்பட்டால் பேரம் பேசும் வலு சிதைக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமாகி விடும். இதனைக் கல்வியில் சிறந்த தமிழ் மக்கள் புரியாமல் இல்லை. ஏப்பிரல் 8ல் மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவர். இது நிட்சயம். பொறுத்திருந்து பாருங்கள். இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களாக நிற்கின்றவர்கள் பெரும் பலத்துடன் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.




Sunday, March 7, 2010

காலத்தின் தேவை - இரா.சிவச்சந்திரன்
பல்கலைக்கழக சமூகத்தினர் வெளியிட்ட அறிக்கையை தரவிறக்க....

Download Prof.R.Sivachandran PDF @ PDFCast.org



Tuesday, March 2, 2010

Professor Rajaratnam Sivachandran

Professor Rajaratnam Sivachandran

Former Dean faculty of Arts, Head of the Geography Department, Head , Dept of Sociology, University of Jaffna.

Born in Velanai to the parents, Dr Rajaratnam and Rukmani.

Educated in Central College Velanai, Vaideswaren Vidyalam Jaffna, Senguntha Hindu College Jaffna.and Jaffna college , Vaddukkodai

Graduated from University of Ceylon Peradeniya, University of Madras , obtained BA Hon (Ceylon ), MA (Research ) ( Ceylon ).
Served as a lecturer in the University of Peradeniya, University of Kelaniya and University of Jaffna.

Prominent Short story writer, Initiator of the Media resource and Training centre
In the University of Jaffna. Journalists were benefited by these courses conducted by the MRTC.
- Extra-mural Studies in the University of Jaffna. –was Initiated and through which the community was linked with the University.

Tel: 021 222 4398 – Jaffna.

Tel: 011 2638961

Mob: 0777 266075.



Thursday, February 4, 2010

எமக்கு பொருத்தமான விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கம்

விவசாயத் தொழிற்துறை எனும்போது அது ஒரு பக்கத்தில் விவசாய உற்பத்திக்குத் தேவையான (உள்ளீடுகள் வாகனப் போக்குவரத்து சேவை.களஞ்சியம் போன்றன) கைத்தொழில்களையம் மறுபக்கத்தில் விவசாய உற்பத்தியை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்களை;Aம் குறிக்கும். இங்கு விவசாய உற்பத்தியை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில் பற்றியே நோக்கப்படுகிறது.

எமது> கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் நீண்ட கால பாரம்பாpயமிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாயக் தொழிற்துறை நோக்கிய விhpவாக்கம் இங்கு குறிப்பிடும்படியாக அபிவிருத்தி;Aறவில்லை. அதாவது, விவசாய வளமானது அதிக வருமானம் தரத்தக்க உற்பத்தியை மூலவளமாகக் கொண்ட விவசாய கைத்தொழில் துறைநோக்கி இன்றுவரை சாpயாகத் திசைதிருப்பப்படவில்லை என்பதே இதன் பொருளாகும். இலங்கையில் நூற்றாண்டிற்கு மேற்பட்ட வளா;ச்சியைக் கண்ட பெருந்தோட்ட விவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக் கட்டத்திலிருந்து பதனிடல் கட்டத்திற்குக்கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது தொpந்ததே.

எமது பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத்தொழில் நெல்லரைக்கும் ஆலைத்தொழிலாகும். பாரம்பாpய வகை ஆலை, ஒரளவு நவீனவகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம் வரை பரந்துள்ளன. மொத்த நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பாpய ஆலைகளே. நெல்லை அhpசியாக மாற்றும் ஒரு சிறு பதனிடல் முயற்சியை மேற்கொள்ளும் இப்பாரம்பாpய ஆலைகள்;; அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளன.

அவையாவன:

அரைக்கப்படும்போது அhpசி அதிகளவுக்கு உடைக்கப்படுகின்றது> அhpசியில் அசுத்தங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளன> தவிடு சாpயாக நீக்கப்படுவதில்லை> புழுங்கல் அhpசியை மட்டுமே இவ்வகை ஆலைககளில் அரைக்க முடிகின்றது. ஆலையை இயக்கும் வலுநுகா;வில் சிக்கனம் இல்லாதுள்ளது. எனவே பாரம்பாpய ஆலைகளை நவீனமாக ஆலைகளை மாற்றுதல் வேண்டும்.

வடகீழ் மாகாணத்தில் நெல் 258இ 933 கெக்கடா; பரப்பில் விளைவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த நெல்விளை பரப்பில் 35 வீதமாகும். (மொத்தம் 100 எனில் 65 வீதம் கிழக்கு மாகணம் 35 வீதம் வடமாகாணம்) இதனால் நெல்வரைக்கும் ஆலைகளை எவ்வகையிலே விரைவாக நவீன மயப்படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.

அhpசியை எவ்வாறு அதிக லாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பதற்கு “நெசில்ஸ்” உற்பத்திகளாக வரும் நெஸ்டம் (நேளவரஅ) பாலின் (குழசடiநெ) ஆகிய குழந்தை உணவூப் பொருட்களே தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். மேற்படி உணவுப்பொருட்களில் 400 கிராம் பொதியில் இருகைப்பிடியளவான அhpசியோ> கோதுமையோ தான் மூலப்பொருளாக உள்ளது. அத்துடன் சில ஊட்டச்சத்துகள் சோ;க்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதனைப் பொறுவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியூள்ளது. இவ் அதிக விலையை அப்பொருள் பெறுவதற்கு அது கைத்தொழில் மயப்படுத்தப்பட்டு சில செயல்முறைக்குட்படுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுவகே காரணமாக அமைகின்றது. எனவே விவசாய உற்பத்திகளைக் கைத்தொழில் மயப்படுத்தும் போது நாம் அதிக வருமானம் பெற முடி;Aம்.

தெங்குத்தொழில் ஓப்பீட்டளவில் கைத்தொழில் மயமாக்கப்பட்டுள்ளதெனலாம். தேங்காய்த் துருவல்இ தேங்காய் எண்ணெய்இ சவா;க்காரம்> மாஜாpன்>வினாகிhp போன்ற உற்பத்திகளும் தும்புத் தொழில் போன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற்பத்திகளும் தேசிய மட்டத்திலே ஒரளவு அபிவிருத்தியை எய்தியூள்ளன. ஆனால் வடக்குஇகிழக்குப் பிரதேசங்களில் இவை குறிப்பிடும் படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லை. தெங்குத் தொழில் அபிவிருத்திக்கான நிறைய வாய்ப்புகள் இங்குள. தெங்குத் தொழில் அபிவிருத்தியானது கிராம மட்டங்களிலே இடம் பெறுவதால் அதிகபயனை விளைவிக்கத்தக்கவை. முக்கியமாக கிராமமட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடி;Aம். கெங்கினைத் தொழில் மயப்படுத்துதோடு அதனை நவீன முறைக்கைத்தொழில் உற்பத்திகளாகவோ> குடிசைக்கைத்தொழில் உற்பத்திகளாகவோ மாற்றுதல் அவசியம்.

இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத்தக்க இன்னோh; முக்கிய விவசாய அடிப்படையிலான தொழிற்துறை சீனி உற்பத்தியாகும். கரும்பு> சில கிழங்கு வகைகள்இ பனை ஆகிய வளங்களிலிருந்து பனை வளம் செய்யப்படலாம். இப்பிரதேசத்தில் தற்போது கந்தளாய்> கல்லோயாவில் கரும்புச்சீனி உற்பத்தியாகின்றது. தேசிய மட்டத்தில் வருடம் 3இ000 000 தொன் சீனி நுகரப்படுகின்றது. ஆனால் 45>000 தொன் தான் உள்நாட்டில் உற்பத்தியாகின்றது. வறண்டவலயத்தில் கரும்புச் செய்கையினை நல்ல முறையில் மேற்கொள்ளலாம். பாசன வசதிகள் அமைக்கப்பெற்றால் வருடம் முழுவதும் கரும்பு பயிhpடப்படலாம். அத்துடன் இப்பிரதேசத்தில் சீனி உற்பத்திக்கான பொருத்தமான கிழங்குவகைகள் எவையென ஆராய்ந்தறிந்து அவற்றினைப் பயிhpட்டு சீனி உற்பத்தியை அதிகாpக்க முடியூம். மேலும் இப்பிரதேசத்தின் முக்கிய பாரம்பாpய வளமான பனைவளத்தை சீனி உற்பத்திக்குப் பயன்படுத்துவோமாயின் அதிக வருமனமும் வேலை வாய்ப்பும் ஏற்படுமெனக் கருதுகின்றனா;. பனஞ் சீனி உற்பத்தியானது அதிக உற்பத்திச் செலவை வேண்டுகின்றது முக்கியமாக எhpபொருள் செலவே அதிகமாக உள்ளது. சூhpய சகதியைப் பயன்படுத்துவதன் மூலம் இச்செலலைக்குறைக்க முடியூமாயின் உற்பத்திச் செலவைக் குறைத்து பனை வளத்திலிருந்து இலாபகரமான முறையில் சீனியை உற்பத்தி செய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியூடன் இணையாக மதுபான உற்பத்தியையூம் அதிகாpக்கலாம். இவை ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் தரம் வாய்ந்தனவாக அமைதல் வேண்டும். பனைவள அபிவிருத்திச் சபை> சமூக நலன் விரும்பிகள் சிலரும் பனைவள உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அண்மைக் காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகின்றனா;. பனைவளத்திலிருந்து பலவகையான அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உல்லாசப்பயணத் தொழில் வளரும் போது இவ்வாறான உற்பத்திகள் அதிக வருமானத்தை எமது பிரதேசத்தில் அதிகளவூ அபிவிருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னோH தொழிற்துறை விலங்கு வேளாண்iமையாகும். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நல்லமுறையில் கிட்டமிட்டு இவை மேற்கொள்ளப்படலாம். புல்வளாத்;து அதனை விலங்குகளுக்கு கொடுத்து பாலாகஇ இறைச்சியாக பெறுவதில் அதிக வருமானம் உண்டு. தினைவகைகளைக் கோழிகளுக்குக் கொடுத்து முட்டையாக இறைச்சியாக நுகா;வதில் அதிக பயன் உண்டு. புல்லும் தினைவகைகளுமே மேற்படி உற்பத்திகளின் விவசாய மூலவளங்களாகும். ஆடுஇ எருமைஇ பன்றி> முயல் இறைச்சிக்கான மாடு போன்றனவும் நல்ல முறையிலே எமது பிரதேசங்களில் விhpவாக்கம் செய்யப்படலாம். கிராமம் ஒன்றில் மந்தை வளா;ப்பில் அவா; தனது வீட்டுத் தேவைக்கான உயிh;வாயூவை (டீழைபயள) உற்பத்தி செய்யலாம் பயிh;களுக்கு உரம் பெறலாம் பால்> இறைச்சி பெறலாம் இப்படி ஒன்றுடன் ஒன்று இணைவாக அபிவிருத்தியூறத்தக்கவகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணைத் திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன் பெறமுடியூம். இதற்கு சிறந்த உதாரணம் மன்னாhpல் அமைந்துள்ள “ஸ்கந்தபாம்’ ஆகும். தனி நபா; ஒருவாpன் மேற்படி ஒருங்கிணைப்புப் பண்ணை அபிவிருத்தியானது பலருக்கு வழிகாட்டவல்லது. விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில் இன்று வரை மிகவூம் குறைந்த கவனிப்பையே பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு கிராம மட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத்தல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு> சிறு கோழிப் பண்ணைஇ ஆடு என்பன வளா;க்க ஊக்கம் அளிக்கப்படுதல் வேண்டும். எமது கிராமங்களிலுள்ள வேலிகளை மதில்களாக மாற்றுவதை விடுத்து இலை>குழை தரக்கூடிய மரங்களை வேலிகளில் நாட;டி அதன் மூலம் விலங்கு வேளாண்மை அதிகாpக்கச் செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதரா வளமுள்ள கிராமக் குடுப்ப அலகுகளை ஏற்படுத்துவதற்கு இவை பொpதும் உதவும்.பால் உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்துறை உற்பத்தியாக மாற்ற வேண்டுமாயின் அதனை புட்டிப்பால்> பால்மா பட்டா;. சீஸ்>ஐஸ்கிறீம்>யோக்ஹட் போன்றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்க வல்ல உற்பத்திகளாகும். புல்வளா;ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத்தொழிற்றுறையின் விhpவாக்கமானது சந்தையின் விhpவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளா;ச்சி பெறத் தக்கவையாகும். யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ள பாற்பண்ணை தற்போது நவீன முறைப்படுத்தப்பட்டு உற்பத்தியை முன்னெடுத்து வருவது போற்றத்தக்க முயற்சியாகும்.

வடகீழ் மாகாணத்திவே 6.1 வீத நிலப்பரப்பைக் கொண்டதும்>அப்பிரதேச>மொத்தக் குடித்தொகையில் 30 வீதத்தை உள்ளடக்கியதுமான யாழ்ப்பாணக் குடா நாட்டுப்பகுதியே தோட்டச் செய்கை நன்கு வளா;ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இலங்கையில் வேறு எப்பாகத்திலும் இல்லாதவாறு செறிந்த முறைப் பயிh;ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ளோh; நவீன விவசாயிகள் என கூறத்தக்கவா;கள். யாழ்ப்பாணக்குடா நாட்டு விவசாயிகள் போல நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களைப் பின்பற்றும் விவசாயிகளைக் காண்பதாpது. பாரம்பாpய முறையை உடனடியாகவிட்டு நவீன முறையைப் பின்பற்றக்கூடிய மனப்பாங்கு இங்குள்ள பெரும்பாலான விவாயிகளிடம் காணப்படுகின்றது. இதனால் நவினத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.

யாழ்ப்பாணக்குடா நாட்டிலே உள்ள தோட்டங்களில் புகையிலை>மிளகாய்>பழங்கள்> தினைவகைள் என்பன பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உபஉணவூ உற்பத்தியில் கணிசமான பங்கினை யாழ்;குடாநாட்டு விவாசயிகளே உற்பத்தி செய்கின்றனா;. எடுத்துக்காட்டாகஇ இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதமும்இ மிளாகய்ச் செய்கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ்குடாநாட்டிற்குள் இரு தசாப்தங்களுக்கு முன்னா; அடங்கி இருந்தது. அடங்குகின்றது. எனவே இவ் உற்பத்திகளை விவசாய அடிப்படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விhpவாக்கம் செய்வது பற்றி நன்கு சிந்தித்து திட்டமிடுதல இம்மண்ணை நேசிக்கும் அனைவாpனதும் கடமையாகும். எடுத்துக்காட்டாக புகையிலை மூலவளத்தைக் கொண்டு சுருட்டுக் கைத்தொழில் விhpவாக்கத்துடன் மாத்திரம் நின்று விடாது> அதனை நவீன முறையிலே சிகரட் உற்பத்தியாக மாற்ற முடிAம்> இதற்கான நவீன இயந்திரங்களைத் தருவித்து> சிகரட் புகையிலை உற்பத்தியைAம் ஊக்குவித்து விவசாயத் தொழிற்றுறை விhpவாக்கம் செய்யப்படலாம்.

இப்பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ்குடா நாட்டு உற்பத்தியில் உணவு பதனிடல் தொழிற்றுறை நல்ல பயனை நல்குமெனலாம். இவற்றுள் முக்கியமாக பழq;கள் பதனிடல்> தகரத்திலடைதல> காய்கறி பதனிடல் என்பவற்றின் விhpவாக்கம் பற்றி அதிகம் சிந்திக்கலாம். சில பருவ காலங்களிலேயே சில பழங்களும்இ காய்கறிகளும் அதிகம் விளைகின்றன. அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் நிரம்பலை அதிகமாக உள்ளன. அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள்>காய்கறிகள் பெருமளவவு பழுதடையூம் நிலையூம் தோன்றுகின்றது. எனவே பழங்களைAம் காய்கறிகளையூம் பாதுகாப்பாக வைப்பதற்கும்> நீண்ட நாட்களுக்கு இன்னோh; வழியில் காப்புச் செய்து வைத்து பயன்படுத்துவதற்கும் சிறப்பான சில தொழில் நுட்ப உத்திகள் பயன்படுத்தலாம். அவற்றுள் சில பின்வருமாறு

1. பாதுகாப்பாக நீண்ட காலம் வைத்திருக்கக் கூடிய பாhpய களஞ்சியங்களை உருவாக்குதல்.


(மெழுகு ப+சுதல் போன்ற நுட்பங்கள் மூலம் பாதுகாப்பளி;த்தல்)


2. உறையச் செய்வது அல்லது இரசாயனப் பாதுகாப்பு செய்வது: (உ-ம் பழங்களை: பழச்சாறு> பழக்கூழ் வடிவிலோ> பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாற்றியோ பாதுகாக்கலாம்)


3. ஊறவைக்கும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல் (ஊறுகாய்)


4. உலா;த்துவதன் மூலம் பாதுகாத்தல். (வற்றல் போடுதல்)

மேற்படி பாதுகாப்பு முறைத் தொழில் நுட்பங்கள் பல்வேறு நாடுகளில் நன்கு வளா;ச்சி பெற்றுள்ளன. அவற்றினைப பின்பற்றி எமது பிரதேசத்திற்கு பொருத்தமான தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றி உணவூ பதனிடல் தொழிற்றுறையை விhpவாக்குதல் வேண்டும். எமது பிரதேசத்தில் பேணிப் பாதுகாத்து சந்தைப்படுத்தக்கூடிய பழங்களென மாம்பழம்>பலாப்பழம்>தக்காளி> பப்பாசி> எலுமிச்சை> தோடை விளாம்பழம்> வாழைப்பழம்> அன்னாசி பனம்பழம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத்தல் இலாபகரமான தென்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவவொரு பழவகையின் பாதுகாப்புப் பற்றியூம் தனித்தனி ஆய்வுகள் நிகழ்த்தப்படவேண்டும். பாதுகாத்துப் பயன்படுத்துவது இலாபம் தரத்தக்கதுதான் என்பதை நிச்சயித்த பின்னரே இம் முயற்சிகள் மேற் கொள்ளபபட வேண்டும். பழச்சாற்றினை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் தொழற்றுறை உற்பத்திகளில் பானங்கள்> தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்இ நெக்டா; போன்றன உடனடியாக பருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப்படையாக் கொண்டவற்றில் ஐhம்>nஐலி> சட்னி> பழக் குழம்பு என்பனவூம் முழுதாக அல்லது வெட்டப்பட்ட பழங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள்> ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும். எமது பிரதேசத்திலுள்ள பல கிராங்களிலே சில பருவங்களின் போது பழங்கள்இ காய்கறிகள் பெருமளவு உற்பத்தியாகின்றன. தேவைக்கதிகமான இப் பருவகால உற்பத்திகளில் பெரும்பங்கினை வீணடிக்கப்படுகின்றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமையாகவூள்ளதால் அதிக விலையாக உள்ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்குபடுத்துவதற்குஇ பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்குப் பொருத்தமான மலிவான பாதுபாப்பு தொழிலநுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசியம். இகற்கான பல ஆய்வூகளும் செய்திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படுதல் நற்பலனை விளைவிக்கு மெனலாம். சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விவசாயஇ கால்நடை உற்பத்தியின் கண்காட்சியில் எமது விவசாயத்iயின் விhpவாக்கம் ஒளிமயமாக காண்பிக்கப்பட்டமை இம் மண்ணை நேசிப்போருக்கு மகிழ்ச்சியை தந்த விடயமாக அமைந்துள்ளது. பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிகாpக்கும் அதே நேரத்தில்> அவ் உற்பத்திகளை அதிக வருமாணம் தரத்தக்கவையாக நவீனத்துவம் கொண்டவையாக மாற்றுதற்கு விவசாயத் தொழிற்றுறை விhpவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவா;களாக உள்ளோம். ஒரு நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியூறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குய வழிமுறை சுருக்கமான தந்திரோபாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயல்முறைக்குட்படுத்தி வேறௌh; உற்பத்தியாக அல்லது பலவாக மாற்றுதல் அவ் உற்பத்திகளை இன்னும் சில செயல் முறைக்குட்படுத்தி இன்னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கைகளே விலசாயத் தொழிற்றுறை விhpவாக்கததின் வளா;ச்சி படிகள் ஆகும். இதன் விளைவாக அதிக வருமானம்-இலாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகாpக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையிலான நாடுகள் விருத்திAற மேற்படி அபிவிருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறைAம் ஆh;வமும் காட்டவேண்டும்.

Tuesday, January 26, 2010

யாழ்.குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம்




தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட் டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின் றது. வடமாகாணத்தின் மொத்த குடித்தொகை யில் 70 வீதத்தினர் யாழ். குடாநாட்டில் செறிந்தி ருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய் கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.

புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத் தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசீன்காலச் சுண்ணாம்புப் பாறையமைப்பைக் கொண்டுள் ளன. இப்படிவுகள் தரைக்கீழ்நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவை யாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புக விடும் இயல்பை அதிகளவு கொண்ட வையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப் படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீ“ர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப்பகுதியிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும்போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல் கின்றது. ஆகக்கூடிய தடிப்பு "100110' வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர்நீர் ஏரிகளி னால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர் நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.


சுண்ணக்கற் பாறைப்படிவுகள் பிரதான நிலப் பகுதியில் ஆழமாகக் கீழ்ப்பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழ மற்று மேற்பாகத்திலும் காணப்படுகின்றன. இதனால் அதிக ஆழமற்ற கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட் டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாக காணப்படு கின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செல வில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பண்படுத்த முடி யும்.


கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயேயாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன

யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வர லாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிண றுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்ப தற்காகவும் விவசாயத்திற்காகவும் மக்கள் பயன் படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப் பாக துலா மூலமும், உள்ளூர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப் பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந் துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை இன்றைய காலகட்டங்களில் உபஉணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச் செய்கை முறை யாக மாறிய பின்னர் நீர் நிறைக்கும் இயந்திரத் தின் பாவனை யாழ்.குடா நாட்டின் சகல கிரா மங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.


இவற்றினால் அண்மைக் காலங்களில் குடா நாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ் நீர் உவர் நீராதல் போன்ற பிரச்சினைகள் தோன்றியுள் ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்ப தில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்ல முறை யில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடா நாட்டில் தரைக் கீழ் நீர்வளம், பாவனை, முகாமைத் துவம், அபிவிருத்தி பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வள சபை வடபகுதி தரைக் கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதி லும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப் படவில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டின் நீர் வளம் எதிர்நோக்கும் பிரச்சினை களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறை கள் பற்றியும் முன்னெப்போதுமில்லாதவாறு இன்றைய கால கட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண் டியவர்களாகவுள்ளோம். திட் டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங் கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள் ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத் திற்கு முன்வைக்கப் படுகிறது.


சில அபிவிருத்தி ஆலோசனைகள்


யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசன மும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம் சமே முன்னுரிமை பெறுகின்றது.


* யாழ்ப்பாணக் குடாநாட்டில் இனி மேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை, முக்கி யமாக விளை பரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது "உள்ளதையும் கெடுக்கும்' ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற் போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறை யிலானதாக மாற்றுவதோடு நீர்ப் பாசன முறைகளிலும் நவீனத் துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்து வத்துவத்தைப் பேணி வீண் விரயமாதலைத் தடுத்து உள்ள விவசாயப் பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்க தாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.


*யாழ்ப்பாணக் குடா நாட்டின் நிலப்பயன் பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்ற தாக மாற்றப்பட வேண் டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்சப் பயன் தரத் தக்கதாக அமைக்கப்படுதல் வேண் டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந் ததாக அமையப் பெறவேண்டும். யாழ்ப் பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர் செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வரு மானம் தரத்தக்க பணப்ப யிர்ச்செய்கைவிருத்தி செய்யப் பட வேண்டும். உபஉணவு, காய் கறி, பழச்செய்கை, பானப்பயிர் செய்கை, எண்ணை வித்துப்பயிர்ச் செய்கை போன்றவனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சிலவிவசாய இந்த கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப் பொருள் களை வழங்குபவையாயும் இருக்க வேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகை யிலை செய்கை ஊக்குவிக்கப்படுதல் வேண் டும். ஏனெனில் இது செய்கையாள ருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர்வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்கும் உதவுவதாகும். தேயிலை, றப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச் செலாவணி பெறுவது போல் நாம் புகையிலையால் அந்நியச்செலா வணி பெறலாம்.


* நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதி களில் விவசாயச்செய்கை. நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்ய்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண் டும். சந்தை நிலைமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவ சாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ் வகை யான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதா கும்.


மழை நீரைத் தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்


* யாழ்ப்பாணக் குடாநாட்டு தரைக்கீழ் நீரின், மீள் நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும், என்பதில் பலர் ஒருமித்த கருத் தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத் திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பி யான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரானது மேற் பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்ப தற்கு சகல வழிகளிலும் நாம் முய லுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட் டின் சுண்ணக்கற் புவி அமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங் களில் நிறையும் தண்ணீ ரில் பெரும் பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிக ரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பை கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின் றன. இவ்வாறான குளங்களைத் துப்பரவு செய் தலும் தூர் அகற்றுதலும் அவ சியம். இங்கு இவ்வாறான முயற்சிகள் அரிதாகவே இடம் பெறுகின்றன.


*தோட்டங்கள் இளக்குவதற்கு குளங்க ளின் மண், மக்கி எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இது மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித் தெரியக் கூடியள விற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளி யேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.


*யாழ்ப்பாணக்குடாநாட்டில் சில பகுதிக ளில் , சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ்நீர் ஓடும் குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலா வரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன் னாலைக்கட்டுவன் குளக்கிணறு, கீரிம லைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம், கர வெட்டி குளக்கிணறு, ஊறணிக் கிணறுகள், யமுனாஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப்பள்ளங் களாகும். இவற்றுள் சில பாசனத்திற்காக பயன்டுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத் தக்க வாய்ப்புகளை கொண்டுள்ளன.


நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஆய் வொன்றின் படி நாள் ஒன்றிற்கு 10 மணித்தியா லங்களில் 30,000 40,000 கலன் நீர்தோட்ட பாசனத்திற்காக அக்கிணற்றில் இருந்து எடுக்கக் கூடிய தன்மை தெரியவந்தது. இவற்றை பாசனத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங் களில் பெருமளவு நீரைத்திட் டமிட்ட அடிப்ப டையில் தரைக் கீழ் நீர் மீள்நிரப் பியாக உட் செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர் வளத்ததைப் பெரி தும் அதிகரிக்கக் கூடியதாக அமையும் என துணி யலாம்.


* தரைக்கீழ் நீர்க் குகைவழிகள் மூலம் நீர் கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப் படுகின்றது. கீரிமலைக்கேணிக் குகை ஊடாக வரும் நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்க வேண் டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனை கள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல் முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை.


நன்னீர் ஏரித்திட்டம்


* யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ் வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங் குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற் றும் திட்டம் பற்றிச் சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப் பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிக ரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக் கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைகீழ் நீர்வில்லைகள் துண்டுபடாது தொட ராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சினைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளைநிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப் பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகளை நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்கு மெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922 இல் இரணைமடுக்குள அணை கட்டப்பட்ட போது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக் கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங் கொள்ளத்தக்கது.


யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்ட கால திட் டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற் றப் படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறை யிலுள்ள 33 உவர்நீர்த் தடுப்புத் திட்டங்களும் உள் ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீ ரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரி களாக மாற்றலாம். அவையாவன.


1. ஆனையிறவு மேற்கு கடனீரேரி
2. ஆனையிறவு கிழக்கு கடனீரேரி
3. உப்பாறு/ தொண்டைமானாறு கடனீரேரி


மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு, அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டு முள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடனீரை உள்ளே வரவிடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்லமுறையில் செயற்படுத் துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடா நாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரி களையும் அதிக பொருள்செலவு இன்றி நன்னீ ரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரண மாக மண்டைதீவையும் வேலணையை யும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரே ரியாக மாற்றலாம். பண்ணைத் தாம்போதி யையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ். நகரத்தின் தென்மேற்கு பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப் பரப்புக ளில் உவர்த்தன்மை நீக் கப்பட்டு அவற்றை வளமான விளை நிலங்காளக மாற்ற முடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமை யுமெனலாம்.


கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக் கின்றனர்.


1. சூழல் மாசடைதல் தொடர்பானது


கடல் நீரேரிகளில் நீர்வரத்துத் தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியி ருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற் றினால் (சோளகக் காற்று) புழுதி வாரி வீசப்படு மென்றும், இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல் மாசடையும் அபாயத்தைக் கொண்டுள் ளதெனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.


இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்க லாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப் பதன் மூலமாகவும் முற்றாக நீர் வற்றும் பகுதிக ளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்ட மிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமா கவும் இம் மாசடைதல் பிரச் சினையைச் சமாளிக் கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப் பிற்கு உட் படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக் குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.


2. கடல் நீரேரிகளில் மீன் பிடித்தொழில் மேற் கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து


* இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப் பகுதிகளில் குடியிருப்புக் களை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடி யதே. குடாநாட்டுப் பரவை கடற் பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்குக் கரையோ ரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக் குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண் டகால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.


பயிர்களுக்கு மித மிஞ்சிய நீர் பாய்ச்சல்


* யாழ்ப்பாணப் பகுதிகளில் நீரிறைப்பு, இயந் திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பணிர்க ளுக்கு மித மிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாகக் கருதப்படுகின்றது. உவர் நீராதல் பிரச்சினைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத் திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசா யிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண் டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனை தடுப் பதற்கு இஸ் ரேல் நாட்டில் காணப்படும் பாசன முகாமை களான விசி றல் பாசன முறைமை,பல குழாய் வழி இணைப்பு க்கள்


மூலம் பயிருக்கு அடியில்நீரைச் செலுத் துதல், ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பைத் தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒரு துளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறை களை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.


* நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்ட மிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண் ணியல், பொறியியல், விவசாய அறிவியல் போன்ற துறைசார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். யாழ்ப் பாணப் பிரதேசத்தை நீர்வள வலயங்களாக முதலில் வகுத்தல் வேண்டும். மழைநீர் ஓடை கள், குளங்கள், கிணறுகள் என்பவற்றை அவ தானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் அள வுகள், உவர்த்தன்மை, நீரின் கடினத்தன்மை, உரம் கிருமிநாசனிப் பாவனைகளால் நீர் மாசு படும் தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடித்தல் போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர்வள வலயங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவு களின் துணையுடனேயே அபிவிருத்தித் திட் டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படை கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங் கள் வெற்றி பெறுமென நம்பலாம்.


*யாழ்ப்பாணப் பிரதேச நீர்வள அபிவிருத் தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத் தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், திட் டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போதுதான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசன அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற் பத்தியில் நாம் தன்னி றைவு பெறுவது மாத்திரமின்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும். *


பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
தலைவர், சமூகவியற்றுறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
(இணைப்பாளர், புறநிலைப் படிப்புகள் அலகு).

சிந்தனைக்கூட கலந்துரையாடல்





சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் , எனும் அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் IIT நிறுவன யாழ் கிளையின் கேட்போர்கூடத்தில், தனித்துவ அடயாள முரண் நிலையின் அரசியல் பொருளாதாரம் எனும் தலப்பிலான கலந்துரையாடல் இடம் பெற்றது, நிகழ்வில் கலாநிதி தாரணி இராசசிங்கம், கருத்துரை வழங்குவதையும், மனித உரிமைகள் இல்ல அமைப்பின் பணிப்பாளர் செல்வி செரின் சேவியர் தலைமை வகிப்பதையும் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம் (படம் : செல்வி கிருஸ்ணகுமார்)