Tuesday, October 9, 2012

யாழ்ப்பாணத்தின் அவலம்- பேராசிரியர் இரா.சிவசந்திரன்!



யாழ்ப்பாணக்  குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய ஜயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப் பகுதியில் அரச பிரதிநிதிகள் யார்? யாரிடம் எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன? மக்களுக்குத்தான் இவர்கள் சேவையாற்றுகின்றார்களா? என்பவை சிக்கலான விடைகாண முடியாத வினாக்களாக எம்முள் எழுகின்றன. இப்பிரதேசம் வாழ் மக்களை அலட்சியப்படுத்தி சிக்கலுக்குள்ளாக்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.

01. யாழ்ப்பாண குடாநாட்டிற்கான வீதி அகலிப்பு நடைபெற்று வருகின்ற போது அதன் எதிர் விளைவுகள் பற்றி எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை. ‘காப்பெற்’ வீதியாக மாற்றப்படும் போது வீதியில் வாகனங்கள் தொகையாகவும், ஓட்டங்கள் வேகமாகவும், இடம்பெறும். வீதி அபிவிருத்திக்கு திட்டமிடுவோர் இவ் ஆபத்துக்களை உணர்ந்து ஏலவே வீதி ஒழுங்கு முறைகளிற்கேற்ப வீதிக் குறிகாட்டிகளை இடுவது இன்றியமையாத முதற்தேவையாகும். பாதசாரிகளுக்கான நடைபாதைக் குறிகாட்டிகள்; பொருத்தமான இடங்களில் மாநகரசபையின் ஆலோசனை பெற்று இடப்பெறுதல் வேண்டும். மேலும் வேகக்கட்டுப்பாடுகளைக் குறிக்கின்ற அறிவித்தல்கள் பாதையின் ஓரங்களில் காட்சிப்படுத்தப்படவேண்டும். நகர எல்லைக்குள் குறைந்த வேகக்கட்டுப்பாடு பேணப்படுதல் அவசியம். அவ் அறிவித்தல் இன்றும் இப் பிரதேசங்களில் இடப்படவில்லை. இதனால் பலர் தினம் தினம் உயிரிழக்க வேண்டியுள்ளது. 

எமது வழக்கத்தில் உள்ள சில தவறான தமிழ்மொழி பெயர்ப்புகள்- அகரன்



எமது தமிழ் வழக்கத்தில் சில ஆங்கில சொற்களை தவறாக அல்லது மிகைநவிற்சியாக பயன்படுத்தி வருகின்றோம். இச் செயலினை பெருமளவு எமது ஊடகங்களே நீண்ட காலமாக செய்து வருகின்றன. புத்தி ஜீவிகளும் அப்பதவியை முன்னர் வகித்தோரும் தமக்குத் தெரிந்தும் அவற்றைத் திருத்துவதில்லை. சரியான விளக்கத்தை அளிப்பதுமில்லை. மற்றவர்களின் அறியாமையில் தமக்குத்தாமே மாலை போட்டு மகிழும் புத்தியாகச் சீவிப்பவர்களாகவே இவர்கள் உலவுகின்றனர்.

            ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தாரக மந்திரம். இதற்கு முன்னுதாரணமாக இங்கு கற்றுக் கொடுத்தோர் இருக்க வேண்டுமல்லவா? இவ் விடயத்திற்கு முதல் உதாரணமாக ‘வாழ்நாள்பேராசிரியர்’ என்ற பதத்தினை ஆராய்வோம். Emeritus என்றால்    Retired or honorably discharged from active Professional duty, but retaining the title of one’s office or position (dean emeritus of the graduate school: editor in chief emeritus  ஒக்ஸ்பேர்ட் ஆங்கில அகராதி விளக்கமளிக்கிறது.


Monday, October 8, 2012

‘சுயமாக எங்களை வாழவிடுங்கள்’ (வன்னிப்பணயம் 3) தினக்கதிருக்காக பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


ஏ9 பாதையின் மேற்கு புறமாக உள்ள வன்னிப்பெரு நிலப்பரப்பினை மே, யூன் மாதங்களில் சென்று தரிசித்து  அப் பகுதியின் சமூக பொருளாதார நிலைகளை ஆராய சந்தர்ப்பம் கிடைத்தது. கிழக்கு பக்கமாக உள்ள பிரதேசத்திற்கு செல்வதற்கு நீண்ட காலமாக அனுமதி கிடைக்கவில்லை. சென்ற 13ஆம் திகதி வற்றாப்பளை அம்மன் பொங்கல் தினத்தையொட்டி அம்மனை தரிசிப்பதோடு அப்பகுதியையும் தரிசிக்கும் எண்ணம் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டோம். யாழ் குடாநாட்டிலிருந்து பெருந்தொகையானோர் வாகனங்களில்  வற்றாப்பளை பொங்கலுக்கு செல்வதை  அவதானிக்க முடிந்தது. வட பகுதி ஏ9 பாதை பயணிப்பதற்கு சிரமமாக இருந்தாலும் இவற்றை சமாளித்து பல வாகனங்கள் சென்றன. சாவகச்சேரியில் இருந்து இயக்கச்சி வரை உள்ள ‘துள்ளல் பாதை’ என வர்ணிக்கப்படும் மேடும் பள்ளமும் கொண்ட பாதை நீண்ட காலமாக திருத்தப்படாமல் இருந்து வருகின்றது. இதனூடாக பயணிக்கும் எவரும் இது பற்றி விசனம் கொள்ளாது இருப்பதில்லை.
ஆனையிறவில் வாகன பதிவை மேற்கொண்ட பின் பரந்தன் சந்தியை அடைந்தோம். பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் ஏ35 இலக்க வீதி ஏறத்தாழ 40கி.மீ நீளமானது. யுத்தத்திற்கு பின்னர் சிங்கள சுற்றுலா பயணிகள் இதனூடாக முல்லைத்தீவுப் பகுதிக்கு சென்று வருகின்ற போதும் தமிழர்கள் இதனூடாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அம்மன் பொங்கல் தினத்திற்கு சென்றுவரவே தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.  பரந்தன், முல்லைத்தீவுப் பாதையின் ஊடாக சிறிய வாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்பட்டதால் மாங்குளம் சென்று  அதனூடாக முல்லைத்தீவு செல்வதற்காக பயணத்தை மேற்கொண்டோம்;.

இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகளும் அவற்றுக்கான தேர்தல் முறைகளும்’ -பேராசிரியர் இரா.சிவசந்திரன்


01. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியையும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய 19 உள்ளுராட்சி சபைகளுக்கானதும், திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் மொத்தம் 5 உள்ளுராட்சி சபைகளுக்கானதுமான  ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்ற போது உள்ளுராட்சி அமைப்புக்களை பகிஸ்கரித்து  அதன்மூலம் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையே தமிழ் பிரதேசங்களில் காணப்பட்டது. மக்கள் தமக்கு கொடுக்கப்பட்ட அரசியலுரிமைகளை பகிஸ்கரிப்பதன் மூலம் ஜனநாயக ஆட்சி முறைகளை அலட்சியப்படுத்தும் அரசுக்கு எதையும் கற்பிக்க முடியாது. இவ்வாறான பகிஸ்கரிப்பால் மக்களை நேசிக்காத மக்களுக்கான வளங்களையும், வருமானங்களையும் சுரண்டுகின்ற கல்வியறிவற்ற புல்லுருவிகளே இவ் அமைப்புக்களுக்குள் புகுந்து  ஜனநாயகம் என்ற பெயரில் அட்டகாசம் செய்வர். எனவே இதனை தடுக்க வேண்டியது உண்மையாக மக்களை நேசிப்போர்களது கடமையாகும். இதனாலேயே தான் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர்  தமிழர் பிரதேசங்களில் பரந்துள்ள உள்ளுராட்சி அமைப்புக்களை தம் வசப்படுத்தி அப்பிரதேச மக்களுக்கு நல்லாட்சியை வழங்க முன்வந்துள்ளமை யாவரும் அறிந்ததே. வன்னியில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது போன்று இங்கும் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். உள்ளுராட்சி அமைப்புக்களும், தேர்தல் முறைகளும் பற்றி நீண்டகாலமாக இதில் பரிட்சயமற்றிருந்த மக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டி அதுபற்றி இங்கு விளக்கமளிக்கப்படுகிறது.       


புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் புலத்தில் தம் புனர்வாழ்வைக் கோரும் தமிழர்கள்!-பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்


’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’இ ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ நீண்ட காலமாக தமிழில் ஒலித்துவரும் இப் பொன்மொழிகளின்;; ஆழமான அர்த்தத்தை நாம் இன்னும்  சரியாக உள்வாங்கி ஜீரணித்து கொள்ளவில்லை என்பதனை புலத்தில் வாழ்கின்ற தமிழர்களதும், புலம்பெயர்வாழ் தமிழர்களதும் அண்மைக்கால செல்நெறிகள்  புலப்படுத்துகின்றன.
             தமிழர்கள் உலகில் 40இற்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து செல்வ செழிப்புடனும், கல்வி கேள்விகளில் சிறந்தும், சாதனைகள் பல புரிந்தும் வாழ்வதாக  பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் ஈழத்தமிழர் தம் நில பிரதேசத்தில் இன்று எதிர்நோக்கும் வரலாறு காணாத நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி பெரிதும் அக்கறையின்றி இருக்கின்றோம். தமிழ் நிலத்தில் வாழும் தமிழர்கள் 30 வருடத்திற்கு மேற்பட்;ட அவசரகால சட்ட அமுலாக்கத்தின்; கீழ் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், புத்த மயமாக்கல், உலக மயமாக்கல் என்ற போர்வையில் பல்தேசிய நிறுவனங்களால் சுரண்டலுக்கு உட்படுதல் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து வரும் போதும் இவைபற்றி பேசுவதற்கும் வழியற்ற நிலையில்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்;. புலம்பெயர்வாழ் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எமது மக்களின், அரசியல், பொருளாதார, சமூக, கலை, கலாசார, கல்வி, சமயம், சுகநல வாழ்வு ஆகிய துறைகளில் மேம்பாடு காண்பதற்கு உதவி புரிவதற்கான வழிமுறைகள் பற்றி பலர் குறிப்பிட்டிருந்த போதிலும்  முக்கியமான சிலவற்றை இங்கு சுருக்கமாகவும், அழுத்தமாகவும் கூற முற்படுகின்றேன். அவர்களால் அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை பின்வருமாறு  வரிசைப்படுத்தலாம்.

ஏ9 பாதையின் இரு மருங்கும் சிங்கள மயம்- (வன்னி பயணம்- 4) – பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 08.08.2011 அன்று காலை 6 மணிக்கு  ஹயஸ் வான் ஒன்றில் புறப்பட்டோம். சிங்கள மயம், புத்தர் மயம், இராணுவ மயம் என தமிழ் அரசியல் வாதிகளும், மக்களும் குறைபட்டுக் கொள்ளுதல் யதார்த்தமென யாழ் – கிளிநொச்சி ஏ9 வீதியின் இரு மருங்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுமானங்கள் துல்லியமாக உணர்த்தின.
வீதியில் எதிர்ப்படும் சில இந்துக் கோயில்களை தவிர இப்பாதை அநுராதபுரத்திலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பாதை போன்றே காணப்பட்டது.  குறுக்கு வீதிகள் பலவும் சிங்களப் பெயரையே தாங்கி நின்றன. கிளிநொச்சியில் வீழ்ந்து கிடக்கும் பாரிய தண்ணீர் தாங்கியை பார்வையிடும் சிங்கள மக்கள் ‘குடிக்கும் தண்ணீர் தாங்கியையும் உடைத்தார்களா!’ என கேள்வி எழுப்புவதற்காக அது காட்சிப் பொருளாகவே பேணப்பட்டு வருகின்றது. யாழ் நூலகம் எரிந்தமையைக் காட்சிப் பொருளாக வைக்காதது எமது தவறு என எண்ணத் தோன்றியது.
தண்ணீர்த் தாங்கிச் சந்தியில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சென்றோம். பொறியியலாளர் மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். கிளிநொச்சிப் பிரதேசக் குளங்களின் புனர் நிர்மாணப்பணிகள் வேகமாக இடம்பெற்று வருவதாகக் கூறினார். முப்பது  செயற்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் 28 திட்டங்களும் தென்னலங்கையின் பாரிய நிறுவனங்களே ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தன. தென்பகுதியினரே பணியாளர்களாகவும் காணப்பட்டனர். ‘அபிவிருத்தி’ என்பது அவ்வப் பிரதேச மக்களுக்குச் சுவற வேண்டும். அல்லாதுவிடின் அது அபிவிருத்தி என்ற போர்வையில் சுரண்டலாகவே முடியும் என்பதே பலரின் அபிப்பிராயமாக இருந்தது. 

தமிழ்த் தேசியம் என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் முடியவில்லை -பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள், இந்த நாட்டில் சிங்கள, தமிழ் மக்களிடையே உள்ள  தெளிவான இடைவெளியைக் காட்டி நிற்கிறது. தென்பகுதியில் அரசு சார்ந்த (ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) கட்சியும், தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளன.
 இந்த நாட்டின் கடந்த 62 வருடகால வரலாற்றில் தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்தாத கட்சிகளுக்கு தமிழ் மக்களது ஆணை கிடைக்கவில்லை. தேசியக் கட்சிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவை சிங்கள தேசியத்தையே வலியுறுத்துவதால் அவை எவற்றுக்கும் தமிழர் பகுதியில் இடமில்லை என்பதனை இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்  துலாம்பரமாக வெளிக்காட்டி நிற்கின்றன.
  இலங்கை என்பது ஒரு தேசியம் என்பதனை தமிழ் மக்கள் ஏற்கவில்லை. கடந்த 62வருடங்களாக மட்டுமன்றி இந்த  உள்ளுராட்சித் தேர்தலிலும் மக்கள்  மீண்டும்  இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அரசு சொல்வது போல் ஒரு தேசியம் ஒரு நாடு  என்பதனை தமிழ் மக்கள்  என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனால் இரு தேசியம் ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொள்வர்;. தமிழ்த் தேசியம் என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் முடிந்துவிடவில்லை என்பதனை ஆணித்தரமாக இத்தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர்.
 அரச வளங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள்  வடபகுதிக்கு வந்திருந்து தீவிரமாகப் பிரசாரம் செய்தது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அப்படியிருந்தும் மக்கள் அரச கட்சியை நிராகரித்துள்ளனர் என்பதற்கான காரணங்களை அரசு ஆராய வேண்டும்.

இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகளும் அவற்றுக்கான தேர்தல் முறைகளும்’ -பேராசிரியர் இரா.சிவசந்திரன்


01. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியையும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய 19 உள்ளுராட்சி சபைகளுக்கானதும், திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் மொத்தம் 5 உள்ளுராட்சி சபைகளுக்கானதுமான  ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்ற போது உள்ளுராட்சி அமைப்புக்களை பகிஸ்கரித்து  அதன்மூலம் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையே தமிழ் பிரதேசங்களில் காணப்பட்டது. மக்கள் தமக்கு கொடுக்கப்பட்ட அரசியலுரிமைகளை பகிஸ்கரிப்பதன் மூலம் ஜனநாயக ஆட்சி முறைகளை அலட்சியப்படுத்தும் அரசுக்கு எதையும் கற்பிக்க முடியாது. இவ்வாறான பகிஸ்கரிப்பால் மக்களை நேசிக்காத மக்களுக்கான வளங்களையும், வருமானங்களையும் சுரண்டுகின்ற கல்வியறிவற்ற புல்லுருவிகளே இவ் அமைப்புக்களுக்குள் புகுந்து  ஜனநாயகம் என்ற பெயரில் அட்டகாசம் செய்வர். எனவே இதனை தடுக்க வேண்டியது உண்மையாக மக்களை நேசிப்போர்களது கடமையாகும். இதனாலேயே தான் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர்  தமிழர் பிரதேசங்களில் பரந்துள்ள உள்ளுராட்சி அமைப்புக்களை தம் வசப்படுத்தி அப்பிரதேச மக்களுக்கு நல்லாட்சியை வழங்க முன்வந்துள்ளமை யாவரும் அறிந்ததே. வன்னியில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது போன்று இங்கும் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். உள்ளுராட்சி அமைப்புக்களும், தேர்தல் முறைகளும் பற்றி நீண்டகாலமாக இதில் பரிட்சயமற்றிருந்த மக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டி அதுபற்றி இங்கு விளக்கமளிக்கப்படுகிறது.         

வன்னியில் விளைவித்த வடுக்கள் (வன்னிப்பயணம்-2)-பேராசிரியர் இரா.சிவசந்திரன்!(Att;Photos)


சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மார்ச் முதல் வாரத்தில்  வன்னிப் பிரதேசத்தில் ஒரு மேலோட்டமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரை துணுக்காய், மல்லாவி போன்ற பகுதிகளை மையமாகக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கு கரை பிரதேசங்கள் ஆழமான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இவ் ஆய்வு நடவடிக்கையில் பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், வி.கமலேஸ்வரன், சி.ரகுலேந்திரன், ஆகியோர் பங்குகொண்டனர். வன்னி நிலம் பற்றிய இவ்வகையான ஆய்வுகள் தொடரவுள்ளன.
‘வன்னிப்பிரதேச வளமும் வாழ்வும் என்ற தலைப்பில் இடம்பெற்ற இவ் ஆய்வில் சமூக கலாசார மேம்பாட்டிற்கான பல  தகவல்களும், தரவுகளும் பெறப்பட்டன.
வவுனிக்குளம், அக்கராயன்குளம், முறிப்புக்குளம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைகட்டியகுளம், தென்னியன்குளம், இரணியன்குளம், பனங்காமம், உயிலங்குளம், போன்ற பகுதிகள் ஆய்விற்குட்பட்டன. இவ் ஆய்வு பெரும்பாலும் மக்களிடமும், அரச அதிகாரிகளிடமும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும், கல்வியாளர்களிடமும், பாடசாலை ஆசிரிய மாணவர்களிடமும், விடயங்களை கேட்டு அறிவதாகவும்,  உற்றுநோக்கல் மூலம் மக்கள் வாழ்வோடிணைந்த பல அம்சங்களை அவதானித்து தரவுகளை தொகுப்பதாகவும் அமைந்தது.


வளமான வன்னியில் வன்முறையால் விளைவிக்கப்பட்ட வடுக்கள்! – பேராசிரியர் இரா.சிவசந்திரன்(Att;photos)


யாழ்ப்பாணம் சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் சிவச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அண்மையில் வன்னிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் அவதானித்தனர். இந்த பயணத்தில் தாம் அவதானித்தவற்றை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அனுப்பி வைத்த தகவல்களை இங்கே முழுமையாக தருகிறோம்.
சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், திரு சி.ரகுலேந்திரன், திரு கமலேஸ்வரன், திரு டேவிட் நாகநாதன் ஆகியோர் 11.03.2011 முதல் 14.03.2011 வரை வன்னிப் பயணத்தை மேற்கொண்டு வன்னியின் இன்றைய நிலை, மக்களின் அவல நிலை, பிரதேசத்திற்கான அபிவிருத்தி வாய்ப்புகள் பற்றி ஒரு மேலோட்டமான ஆய்வை மேற்கொண்டோம். அதன் ஆரம்ப அறிக்கையை சிந்தனைக்கூடத்தின் கவனத்திற்கு சமர்ப்பித்திருந்தோம்;. அவற்றில் சில முக்கியமான விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவிப்பது பொருத்தமென கருதுகின்றோம்.


வடக்கிற்கு படையெடுத்து வந்த வங்கிகளின் தமிழ் விரோத செயற்பாடுகள்- பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


 வன்னி யுத்தத்தறிற்கு பின்னர் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்ற கோஷத்துடன் படையெடுத்து வந்த பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இங்கு தமிழ் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையிட்டு இங்குள்ள மக்கள் குழப்பமும், கவலையும் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் யுத்தத்தின் பின்னர் ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தமது கிளைகளை அமைத்துள்ளன. ஏலவே இயங்கிய மக்கள் வங்கி, ஹற்றன் தேசிய வங்கி, இலங்கை வங்கி, செலான் வங்கி போன்றவற்றுடன் பல புதிய வங்கிகளும் இணைந்து பிரதேசங்கள் தோறும் தமது கிளைகளை அமைத்து பரவலாக்கியுள்ளன. வங்கிகள் பிரதேசங்களில் அமைக்கப்படும் போது வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென பொதுவாக நம்பப்பட்டது.  மிகக் குறைந்த பிரதேச இளைஞர்கவே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். பெருமளவு பணியாளர்கள் தென்பகுதியில் இருந்தே அழைத்து வரப்பட்டுள்ளனர்.
                           பொதுவாக பிரதேச வங்கிகளின் செயற்பாடு அந்த அந்த பிரதேச மக்களின் சேமிப்புக்களை வைப்பிலிட்டு அதனை பல்துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முதலீடு செய்வதற்கு வழங்குவதாகும். புதிதாக தொழில் தொடங்குபவர்களிற்கும், விவசாயிகளுக்கும், கிராமிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கும், விவசாயத்தை அபிவிருத்தி செய்யும்; திட்டங்களுக்கும், மீன்பிடியை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் குறைந்த வட்டியில் இலகு கடன்களை வழங்கி அதனை  அபிவிருத்தி செய்ய உதவுவதே இவ் வங்கிகளின் முக்கிய பணியாகும். தற்போது இரண்டு வருடங்களாக வடமாகாணத்தில் இயங்கும் இவ்வகையான வங்கிகள் இவ்வாறான திட்டங்களை நல்லமுறையில் மக்கள் விரும்பும் வண்ணம் மேற்கொள்வதாக தெரியவில்லை.